Monday, 4 July 2022

இலங்கைத் திருநாடு

 நாலா திசையும் நாடுகள் நூறு

நாலாயிரமாண்டு வரலாறு 

கடந்தது நம் நாடு - நாளொன்றுக்கு

மானுடர் நாலாபுறமிருந்து நம்மை

நாடிவருவார் நட்போடு


நாடுகள் பலநூறிடையே 

நல்ல சுவனக்காடு - நம்மன்பின்

இலங்கை நாடு - இந்துமாக்கடலிடையே இறைவனமைத்த வீடு

இந்தியக் கண்டத்தின் கீழமைந்த

இருதயக் கூடு


இனமொழிமதங் கடந்து மக்கள்

வாழ்வர் அன்போடு - இவை

யாவுமறிந்து இனமதமென

பிளப்பார் அரசியல் நோக்கோடு

பிளவுதரும் பேத அரசியலை

பாழுங்கிணற்றில் போடு


ஒண்றிணைவோம் நாம் ஒருதாய்

புதல்வரெனும் உணர்வோடு

நீளகங்கை மகாவலி எங்கள் ஆறு

கல்லில் செதுக்கிய சிற்ப சீகிரியா

எங்கள் வரலாறு


புத்தமிந்து இஸ்லாமிடையே

வீணாயேன் தகராறு - மீன்

பிடித்து நீந்த நமக்குன்டு கடலாறு

சிங்களம் தமிழ்மொழி இரண்டிலும் பேதம் கிடையாது.


மூவினமும் ஒன்றிணையும் 

சிவனொளி பாதமலை எம்

பாரம்பரிய மேடு - அங்கே காண்போம் ஒற்றைப் 

பாதச் சுவடு


நெல் விளைய செடி தழைய

இன்பக் குளிர் நாடு

இதையத்தளவே சின்னஞ்சிறு நாடு - இதயமில்லாவிடில்

இயங்காது உலக நாடு


வாழ்வோம் வளமோடு

ஆள்வோம் அன்போடு


2020.07.18

10.30 AM

 #சிறை

#ஆறாம்_மாடி

#கொழும்பு01




No comments:

Post a Comment