தெரு வழியே வரும் வேளை
ஒரு சலனம் ஒரு சஞ்சலமின்றி
பெருஞ் சாந்தம் பேரமைதியே
நடமாடுவதாய் நான் காண்பேன்
அதுவே கலாநிதியின் வேடம்
பூண்டதை யாதெனச் சொல்லவேன்
குறைகுடம் தளும்பக் கண்டேன்
குறையொளி மின்மினி மின்னக் கண்டேன்
முட்டையொன்றிற்காய் ஊரெங்கும்
கேரும் கோழியைக் கண்டேன் ஆயினும்
தளும்பா நிறை குடம் எங்கும்
காண்கிலேன்
மின்னா நிறையொளி நிலவை
எங்கும் காண்கிலேன்

ஆயிரம் முட்டையிட்டு
ஆர்ப்பரிக்கா அடக்கமுடை
ஆமைதனை காண்கிலேன்
அத்தனையும் சுக்ரி
வடிவிலல்லோ கண்டேன்
நீளச்செல்லும,; நிலத்துள்
ஆழச்செல்லும் வேரை
தரை மேல் நிற்கும்
மாந்தர் காண்பது தகுமோ?
நெடுந்தூரம் நீளும் ஞானத்தை
ஆழப்புகும் அறிவை - தூரப்
போகும் யாரால்தான்
ஆழப்புரிய முடியும்?
என்னால் எப்படி உமை
உணர முடியும்?
பொன்னறிவு புதைந்;த
புதையல் நீர்
நல்லறிவு சமைந்த
படையல் நீர்
சொல்லழகு மிகுந்தவர்
சபையில் நீர்
சொல்லி முடிக்கப் போதா
கவியில் உம்மை
அதானலன்றோ அன்றரொரு
தினம் புகன்றார் புகழ்
வள்ளள் அறிவுத்தந்தை
நளீம் ஹாஜியார்
அளந்து நிறுத்து
உடலெடை எத்தனை
என கணித்து அத்தனைக்கும்
மொத்தமாய் பொன்னைத்
தருவேனே அன்றி
பொற்சிந்தை பொருந்திய
பேரறிஞர் மாமேதை
கலாநிதியை யான்
தந்திலேன் - இனியும்
கேட்டிடாதீர் என்றார்
நளீமியா அரங்கேறி
சிறு அகங்காரமின்றி
சீர் உரையாற்ற
ரீங்காரத் தேனியும் வரும்
உம் பேச்சமுதை பருக.
அதனாலல்லோ உமைக்
கண்ட மறு நொடி
எனக்குள் குடிகொள்ளும்
நிசப்த விடிவெள்ளி
என்னூலுக்கு வாழ்த்துரை
வழங்கி என்னை
நெறிப்படுத்திய உமக்கு
நன்றிகள் கோடி
வெகு காலம் மிக நலமாய்
சுக தேகம் கொண்டு
பல்லாண்டு பன்னூறாண்டு
வாழிய வாழியவே!
No comments:
Post a Comment