சித்தமெனது சொல்லு
நித்தமெனது துக்கம் கொல்லு
பித்தம் தலைக்கேறியது போதும் நில்லு
யுத்தம் செய்து வெல்லு
குத்தும் கத்தி கொண்டு செய்தால்
மட்டும் அது யுத்தமல்ல
கொட்டும் தோட்டா சுட்டும் செய்தால் மட்டும் அது யுத்தமல்ல
அடுத்தவன் அவமதித்தவன்
என் நாமம் கெடுத்தவன்
எனக்கே காலக்கெடு கொடுத்தவன்
கர்வமெடுத்தவன்
பெருமை கொழுத்தவன்
பீய்ற்றலில் வலுத்தவன்
என என்னை எதிர்த்தவன்
அத்தனை பேரும்
அதிர்ந்து நிற்க
உதிர்ந்திடாது
உயர்ந்திடுவதே யுத்தம்
No comments:
Post a Comment