Tuesday, 8 March 2016

உதிரும் முத்து

சிங்களத்தை செதுக்கிய சிற்பி
செதுக்கிய சிற்பங்களை விட்டு
சிறகொடிந்து செல்கிறது
சிற்பங்களை சிற்பியின்
நினைவுகள் கொல்கிறது

பல்லாண்டாய் பாடமெடுத்து
நல்லானாய் வாழச்சொல்லிக்கொடுத்து
வல்லோனாய் உருவெடுத்த
எம்மாசான் யாசீன் எம்மைபிரிகையில்
கல்லான எம்முள்ளம் கசிந்து வடிகிறது

பதங்கள் பலநூறு சொல்லி
அதனை பிரயோகிக்க பல
விதங்கள் பலகோடி சொல்லி
கவிகள் பல எழுதி அதனை
ரிதங்கள் பலவற்றில் பாடி
இதமாக எம்மிதயங்களில்கூடி
இருந்த உள்ளம் விடைபெறுகிறது

சிங்களத்துக்கு என்றும் தனிக்கொப்பி
தலையில் இருக்கவேண்டும் எந்நேரமும் தொப்பி
சிலவேளை போனால் தவறித்தப்பி
பேச்சாலே எம்மை செப்பி
முகத்தில் கரி அப்பிவிடுவார்
ஆனால் அப்பியெதெல்லாம் சந்தணம். செப்பியெதெல்லாம்
பொன் வந்தனம்.

பாலைநிலச்சிங்களத்தில்
ஒரு சிங்களச்சோலையதனை
சிரஷ்டித்துவிட்டுச்செல்லும்
யாசீன் ஆசானுக்கு நேசன் கவி
சமர்ப்பணம்

No comments:

Post a Comment