Tuesday, 29 May 2018

ரமழான் விடுமுறை பாடநெறி

வசந்தமென வந்து சொரிகிறது
நண்மைகளை தந்து பொழிகிறது
உலகப்பந்து முழுதும் கோடி அருள்
வசந்தமென வந்து சொரிய வந்தது ரமழான்

இந்தவேளையிலே பாவங்களில்
வெந்து போன எம் உள்ளங்கள்
நொந்து மனம் நோகி இறைவனிடம்
மன்றாடி மீள வசந்தமென வந்து
சொரிகிறது ரமழான்

தூரத்தே யாரும் பாராமல்
தூசுபடிந்து காணாமால் போன
திருமறையை திறந்து பார்த்து
நெஞ்சில் சுமந்து நாவில் தவழ்ந்து
மனதில் குடியிருக்க வசந்தமென
வந்து சொரிகிறது ரமழான்

இம்மகோன்னத ரமழானில்
வீணும் விளையாட்டும்
கூத்தும் கும்மாளமும்
சண்டையும் சச்சரவும்
காயமும் கத்தியும்
என்றே சிறார் யாவரும்
காலம் போக்கையில்
நேரம் வீணாக்கயில்

வசந்தமென வந்து சொரியும்
ரமழானை உச்சி முகர்ந்து
அள்ளி அணைக்க நல்லவழி
நமக்கு சொல்லித்தர வந்த
அறிவு வள்ளல் (Rvc)
ரமழான் விடுமுறைக்கால பாடநெறி

அறிவும் திறமையும்
விழுமியமும் கலந்து
ஈமானும் பிசைந்து
உற்சாகமாய் களிக்க
வாய்த்த வரம்தான் RVC

No comments:

Post a Comment