Wednesday, 24 January 2018

நட்பே நீயின்றி நானில்லை

வெட்டி யெறிந்த கிளை யதை
ஒட்டிவிட முடியுமோ? ஓர் நாளேனும்
நட்டிவிட முடியுமே மற்றோர் செடியாய்
குட்டிவெடித்து தனியாகும் வேறாய்

உடைந்த எலும்பை ஒட்டலாமோ எளிதில்
ஒட்டினாலும் உடன் உபயோகமுண்டோ விரைவில்
ஒட்டியுறுதி யானாலும் ஒட்டு ஒட்டன்றி
ஒட்டுமுன் உள்ள வைர என்பாகுமோ?


ஒட்டித்தான் நடக்கையில் ஒரு நாள்
ஓடித்தான் செல்கையில் ஒட்டுத்தான் விட்டுவிடாதோ?
ஒட்டே இன்றி உடைந்த என்பு
ஒட்டுப் போட்டா ஒட்டிக் கொள்ளும்?

பிளந்து இரண்டான பாறை உலகு
இருண்டாலும் ஒன்றாகாது இதை யேனும்
இனி யேனும் புரிந்தால் இதை யத்தில்
இமையச் சுமை இருந்தஇடம் தெரியாது.

இருந்தாலும் இருதையம் இதை யேற்காது
நீருக் குண்டோ நெடும் பிரிவு
வாள் வீசி வெட்டினாலும் வெட்டுப்படாது
தூள் தூசி போலானாலும் ஒட்டிக்கொள்ளும்
 
கல்லோ கிளையோ என்போவல்ல என்னட்பு
வெட்டினால் பிரியாத வற்றினால் ஒன்றாய்வற்றும்
ஊற்றெடுத்தால் ஒன்றாய் ஊற்றெடுக்கும் நீரின்றி
 யாருமில்லை நட்பே நீயின்றி நானில்லை

No comments:

Post a Comment