கெஞ்சிச்சாகாதே கேட்டதங்கிலை
தஞ்சம்புகாதே திராணி இல்லை
அடைக்கலம் கேட்காதே அன்பங்கிலை
கண்ணீர்சிந்தாதே நீயங்கு கணக்கிலிலை
நம்பிச்சாகாதே நட்பங்கு இல்லை
அழாதேயங்கு உனக்காய் எவனுமில்லை
தஞ்சம்புகாதே திராணி இல்லை
அடைக்கலம் கேட்காதே அன்பங்கிலை
கண்ணீர்சிந்தாதே நீயங்கு கணக்கிலிலை
நம்பிச்சாகாதே நட்பங்கு இல்லை
அழாதேயங்கு உனக்காய் எவனுமில்லை
தேவை வர தேடி வருவர்
தேவை முடிய ஓடி விடுவர்
தேடிப் போகையில் சாடி விடுவர்
தெரு நாயினும் கொடியவர்
தேவை முடிய ஓடி விடுவர்
தேடிப் போகையில் சாடி விடுவர்
தெரு நாயினும் கொடியவர்
நட்பங்கே நட்பங்கே யென
நாள் தோறும் நினைத்தாயே
நயவஞ்சமங்கே வஞ்சங்கேயென
நினைக்க மறந்தாயே!
நாள் தோறும் நினைத்தாயே
நயவஞ்சமங்கே வஞ்சங்கேயென
நினைக்க மறந்தாயே!

நாடி வந்ததும் கோடி போய்யென
நொடி ப்பொழு தேனும் எண்ண
மறந்தாயே மட நாயே!
உனை உதறி எறிந்தவனை
உளறி கொட்டாதே - எண்ணியெண்ணி
அவன் அலறி ஓட எங்கோ
நீ பிளிறி ஆடு
உளறி கொட்டாதே - எண்ணியெண்ணி
அவன் அலறி ஓட எங்கோ
நீ பிளிறி ஆடு
குறுக்கே கோடி துயர் வரலாம்
வழக்கே யுனை மூடி விடலாம்
செருக்கு தலைக் கேறி ஆடாதே
வெடுக்கென கவலையில் வீழாதே
வழக்கே யுனை மூடி விடலாம்
செருக்கு தலைக் கேறி ஆடாதே
வெடுக்கென கவலையில் வீழாதே
பார்த்தும் பாராமல் கண்டும் காணாமல்
கேட்டும் கேளாமல் பேசியும் பேசாமல்
போனாலவன் போகட்டும் போயெங்கோ சாகட்டும்
பேயெனென்றே பேராகட்டும் அவனகந்தை
இடிந்து தூளாகட்டும்
கேட்டும் கேளாமல் பேசியும் பேசாமல்
போனாலவன் போகட்டும் போயெங்கோ சாகட்டும்
பேயெனென்றே பேராகட்டும் அவனகந்தை
இடிந்து தூளாகட்டும்
No comments:
Post a Comment