Monday, 22 January 2018

தமிழ்

சொல்லழகில் சொர்க்மென
வில்லழகாய் வளையெழுத்துக்களே
அணியழகில் கனிவர்க்கமென
பிணியேறா கலைக்ற்பனைகளே

மொழியழகை விழியழகென
தமிழினை கவிதனில் பொழிவோமே
கவிமழைகளில் தமிழினை
அள்ளும் அமுதென சொரிவோமே

நீடு காலம் நாடு ஆண்டு
ஓடும் பழமை தேடும்போது
மூடுண்டு பீடுநடை போடும் நீ
கோடிபுகழ் கொண்ட தமிழே

ஆளுந் தமிழாய் அன்று நீ
அலங்காரம் கொண்டாயோ
வாடுந் தமிழாய் இன்று நீ
வதங்கி நின்றாயோ

நாளை உனை நமதுலகு
நாடி வந்து நற்றமிழங்கேயென
தேடி அலைந்து கோடி நாள்
தவங்கி நில்லாதோ

தேமதுரம் உதிரம் பெற்று
உணர்வும் சேரப்பெற்று
உருவங்கொண்ட கர்வமிலா
தேன் மதுரைத் தமிழே

மதியுங்கெட்டு நாதியுமற்று
பீதியுமுற்று ஜோதியுமற்று
வீதியில் திரிவாயோ -மேதியென
அலைவாயோ வாவியுள் நுழைவாயோ

வீறு கொண்டு சூடிக்கொண்ட
ஈழமென்ற பேரொன்றுண்டு
தமிழே நீ வாழவே இன்னும்
வந்திங்கு குடிகொள்ளு

No comments:

Post a Comment