Saturday, 11 November 2017

அக்குறனை அழகு

பற்றி தொற்றி ஏறி யொட்டி
உடலின் உதிரம் உறிஞ்சும்
மலை அட்டைகள் பல ஏற
தட்டிவிட்டு தானே நடந்தோம்

பச்சிலை களாயிரம் கூடி அமைத்த
நற்சோலை யிலாயிரம் அழகு ஒழுக
கற்களிலே கணக் கின்றி நடந்தோம்
குளிரில் மேனி குளிர்ந்தோம்

மிளகு கொக்கோ வெற்றிலை இலவு
மரஞ்செடிகொடி சாதிக்காய் கண்டோம்
கரும்பாறைவழி நீரோடுந்தருணம்
காலெமது நனைத்து றைந்தோம்

தம்பி ஆசர் வழி காட்ட
அண்ணண் தாரிக் பேச்சால் அழகுக்கே
மெருகூட்ட நானும் மலைக்குறிஞ்சி
பாடிய கபிலரோடு கலந்துவந்தேன்

ஈரச் சருகில் ஏறிப் போகையில்
தூரச் சறுக்கி நிலங்கீறி விழுந்தேன்
இறங்கிப்போகையில் தூறிப்பாய்ந்தேன்
மீறிப்போனால் மரணம்

சோறும் கோழிக்குழம்பும் வதக்கல்
கத்தரியும் பருப்புச் சாதமும் பப்படமும்
பகிர்ந்தே புசித்து பகலு ணைவை
உண்டு நன்றியுஞ் சொன்னோம்

வளைவு களிலும் சரிவு களிலும்
காணும் அழகுகளின் புதைந்தேன்
அக்குறையின் எழில் அமைதியெனை
கவியெழுதி தீர்க்கச்சொல்கிறது

No comments:

Post a Comment