Wednesday, 20 September 2017

நற்பிரஜைத்துவமும் சமாதான சகவாழ்வும்

அவைக்கு வந்த அறிவு திலகங்களே!
போட்டியிட வந்த அருமை கழகங்களே!
சங்கத் தமிழால் சிங்கப்பூர் புகழால்
வங்கத்துக்கே கேட்க தங்கக் கவி
பாட வந்தேன் -பூப்பரப்ப சுவந்தம்
பாப்புனைய முன் நான் -சுவன
பூத்தூவுகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்

அகன்றது நடுநிலை நம் வழி
புரண்டது துவேசப் பேர் வழி
விரண்டது விரோதிக ளது வழி
நிலைத்தது நம்மொற்றுமை மொழி

இனங்களை பிரித்திடும் கயவரை அழி
இனங்களிடையே பிரிவினைகளை ஒழி
இனமுரண்பட முன் திற எம் விழி
இனமிரண்டு ஒன்றிட அமை வழி

இனம் இன மென தினம்
தினம்  அனு தினம் அழிகிறது
மனித இனம் குவி கிறது
கழுகுக்கு மனித பிணம்

இனி ஒரு நாளும் இனம்
இனம் என பிரித்து இன்னல்
தரு வோரை இனம் கண்டு
ஒழி ப்போ ம்

தினம் தினம் யாம் மனித
இன மென மனமதில் ஜெபிப்போம்

கொடி யது குறுக்கு வழி
நெடி யது நேர் வழி
சீறு வது கயவர் வழி
சீரியது நபி வழி

புனித மெழும் மனித மிகும்
மதீனா வில் மனிதப் புனித
நாயகர் நபி நாதர் ஒழுக்க
சீலர் வழி நடப்போம்

அதன் முன் அவர் அணுகுமுறை
என் னென ? சற்றே அலசி
பார் ப்போம் அதனை செவி
தாழ்த் திக் கேட்போம்

கேவல மும் கோமண மும்
கீழான இழி திரு மணமும்
குந்திக் குலாவி கும்மாள மிட்டு
கூத்தாடி வந்து பாவமிடையே

காத் தாடி என சுழன்று
சாத் தானுக்கே பூத் தேடிக்
கொடு த்து சாத் தானையே
கூத்தாடச் செய்யும் மானிடரை

கோமக னெனவும் பூமக னெனவும்
                    ஆக்கினாரே
நரகிலி ருந்து வேளியே
                     தூக்கினாரே
தீமைகளை தாக்கி னாரே ஒற்றுமை
              யதை தேக்கினாரே
அதனை தேக்கென ஆக்கினாரே

செஞ் சாயமாய் குருதிப் பாயமாய்
உடலெ ங்கும் வெட்டுக் காயமாய்
சண்டை யிட்டு அழிந்தனர் மாயமாய்
ஆனது தேசமோ நாசமாய் நாசமோ
என்றும் பெருஞ் சேதமாய்

ஆனா லும் நெஞ்சம் எங்கும்
மனித நேயமாய் பிறன் துக்கம்
கண்டு தன்விழியில் கண்ணீர் பாயமாய்
நல்லதொரு தூயதேசமாய் கட்டினாரே

யூதம் கிருஸ்தவம் முஸ்லிம்  எனும்
                  மூவினமாமே
நபியங்கு ஒற்றுமை சக வாழ்வை
                   தூவினாரே
உமக்குநாமும் எமக்குநீரும் காவலரண் என
                   கூவினாரே

நாட்டை  வீட்டை காக்க காட்டை
உண்டா க்காமல் புதுக் கோட்டை
கட்டாமல் மூவி னமும் கூட்டுச்
சேர்ந்து ஒற்றுமை கூட்டைக் கொண்டு
கோட்டை கட்டி நாட்டை காத்தாரே

ஹிட்லர் ஒரு நாளேனும் புத் தன்
              ஆனதுண்டோ?
மறு தலையாய் ஈழத்திலும் பர்மா
தூரத்திலும் புத்தன் ஹிட்லர் ஆனது
                         கண்டோ?
உலக நாடுகள் என்றேனும்
               கேட்டதுண்டோ? 

ஈழத் தில் தொண் ணூறிலும்
தொள்ளா யிரத்து பதினை ந்திலும்
துண்டேனும் தந்தேனும் எம்மை காக்க
மாட்டீரோவென ஓரினம் திண்டாடிய
வேளை ஒற்று மையும் சகழ்வும்
துண்டு துண்டா கியதே!

நசுங்கி கசங்கி மடிந்து நொறுங்கி
நாலாயிரம் பேர் போகும் தொடரூந்தில்
தொடரான இம்சையில் தசை தளர்ந்து
மேனி குளிர்ந்து தலைசுற்றி 

மூளை கொதித்து புத்த மத
மூத்தவர் ஒருவர் மூர்ச்சை யுற்ற
வேளை யிலே முஸ்லிம் இளைஞர்
நால்வரிடையே நல்லகுளிர்நீர் இருந்ததாம் 

நின்ற வரும்  கண்ட வரும்
மூத் தவர் உயிர் காக்க நால்
வரிடமும் கெஞ்சி நின்றா ராம்
அதற்கொரு பதில் கூறினாராம்

நாமும் நெடுந்தூரம் போக வேண்டும்
ஆறாத் தாகம் வரும்போது பருகவேண்டும்
நால்வருக்கும் ஒரு போத்தல் சத்தியமாய்
போதாது மூத்தவர் செத்தால் பிழையில்லை

யாதெனின் அவர்தான் நம்மவரில்லையே
நின்றவ ரெல்லாம் சினந்து சீறி
பொங்கி யெழுந்து மதத் தையும்
இனத்தையும் சாடி முடிக்க நால்வரும்

ஆறஅமர ஆறேழு நிமிடம் ஆலோசித்து
அரைத் தேக்கரண்டி நீர் கொடை
கொடுத் தாராம்
பின் னெப்படி ஒற்றுமை தழைக்கும்
தூய தேசம் நிலைக்கும் வேற்றுமை
தான் புதிதாய் முளைக்கும்  இரத்தக்கறையோடு
பலபேரை பலியெடுக்கும்

சுக வாழ்வும் சக வாழ்வும்
குடி கொள்ளும் குடிகளி டையே
நட்பு றவும் கூட்டு றவும்
கொண் டாடி மகிழும்

தேச த்துக் கெல்லாம் சர்வ
தேச த்துக் கெல்லாம் -போலி
வேச ங்களை நீக்கும் நம்
சிங்கப்பூரை மறப்போமோ!

பல்லி னமாய் நல்லி னமாய்
கல்லி ன்றி பொல்லி ன்றி
வில்லி ன்றி வேலி ன்றி
உரிமை வெல்லும் பூவினமாய்

எங் கள் சிங்கப் பூராம்
என் றும் தங்கத் தேராம்
எவ ரும் எங்கும் வாழலாம்
என் றும்தம் பங்கு கேட்கலாம்

பள்ளியிலே பல்லி னமும் கற்கலாம்
பாதையிலே பலரும் தம்முறைப்படி நிற்கலாம்
பங்கமின்றி பிறருக்கு நண்மை பயக்கலாம்
யாவரும் படைப்பயிற்சி பெற்றிருக்கலாம்

பாகுபாடு ஜாதி கூறு போடு
பேத மாறு பாடு யாவும்
இல்லை அடி யோடு தம்மொழி
கற்று வெற்றி நடைபோடு

என நல்லு தார ணமாய்
முன்னு தார ணமாய் தரணிக்கே
என்றும் அழகு தோர ணமாய்
சிங்கப்பூரே னையேற் போமே!

சொல்ல சொல்ல நா வூறுமம்
கேட்க கேட்க செவி தேனூறும்
அவனிக்கே என்றும் அழகு கூறும்
சிங்கப்பூரே தங்கத்தே வாழியவே!!!!! 


  • நளீமியாவில்  நடைபெற்ற நற்பிரஜைத்துவமும்  சமாதான சகவாழ்வு  (المواطنۃ الصالحۃ والتعايش السلمي  )எனும்    தலைப்பிலான மூன்று நாள் கல்வி முகாமில் சிங்கப்பூர் அணி சார்பாக போட்டியிட்ட கவிதை

2 comments: