Saturday, 26 August 2017

சுற்றுப்பயணம்

தாமரைத்தடாகமதில்
தாவும் மரைகளாக நாம்
பூமரத்தோப்பதனிலே -பாவமறியா
பாமரர்களாக நாம்

உலவித்திரிந்தான் அப்ஸல்
பழகித்திரிந்தான் பாஹிம்
புளுகித்திரிந்தான் அபழல்
புலம்பித்திரிந்தேன் கவி நான்

ஒருமித்தே யாம் இருக்க
சயனித்தான் அருகே அப்ழல்
குழுமித்தான் திரிந்த வேளை
உறுமித்தான் திரிந்தான் அப்ஸல்

பெருமிதத்தோடு பெரும்
பயணம் தொடங்கி பெரும்
பாட்டுடன் முடித்தோம்
பெருமூச்சு விட்டோம்

No comments:

Post a Comment