Friday, 4 September 2015

வாழ்த்து

எம்மை பாராட்டி சீராட்டி
எழுத்துக்களால் தாலாட்டி
அறிவுச்சுனையில் நீராட்டி
எம்மை வளர்த்த ஆசானை
வாழ்த்தி வரவேற்று போற்றி
புகழுதல் எம் நெடுநாள்கடன்
மெழுகெனக்கரைந்து ஒளியென
மிளிர்ந்து ஒளிர்ந்து அறிவு தந்து

கல்லெனக்கருதும் சிறாரை
சிற்பி என தன்னை ஆசான் கருதி
அறிஞன் என வடித்து உலகாள
வைத்தவரைவாழ்த்திடல்
எம் நெற்றிக்கடன்
அந்தியும் அந்திக்கு முந்தியும்
அதற்கு பிந்தியும் ஓயாது
அயராது உழைத்த
ஆசானுக்கு வாழ்த்துக்கூறல்
அவசியம் என சோதரரே சிந்தியும்
இரணம் எது?கிரணம் எது?
பிராணம் எது? புராணம் எது?
எதுவென பகுத்தறிவை தொகுத்து
வகுத்தல் பகுத்தல் எதுவென
எமக்களித்த ஆசானை போற்றிடுவோம் வானுயர ஏற்றிடுவோம்.
இது என்னாசான் ரயிசுதீன் அவர்களுக்கு சமர்ப்பணம்

No comments:

Post a Comment